மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு) 4-வது‌‌ வீதியை சேர்ந்த சம்சு அம்மாள்அவர்கள்




கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு)  4-வது‌‌   வீதியை சேர்ந்த  மர்ஹூம்.சுலைமான் ராவுத்தர் அவர்களுடைய மனைவியும்,  EMS.செய்யது முகம்மது அவர்களுடைய தாயாரும்,  மர்ஹூம்.பதுர்ஜமான், அப்துல் காதர், பாரூக் அலி அவர்களுடைய மாமியாருமாகிய மண்ணெண்ணெய் கார வீட்டு சம்சு அம்மாள்  அவர்கள் இன்று 11-08-2023 வெள்ளிக்கிழமை  வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 06.30  மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments