பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடி வசூல் செய்யப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
பட்டுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி ஏ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி டி.வி. மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் கே.சத்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் என்.அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
11 வழக்குகளுக்கு தீர்வு
2 அமர்வாக பிரிக்கப்பட்டு 146 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 65 ஆயிரத்து 510 வசூல் செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.சிறப்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆ.மாஸ்கோ மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் பிரசன்னா, வட்ட சட்ட பணிகள் குழு சட்ட பணியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்து இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.