திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பயணிகளிடம் சோதனை
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் சில பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் செல்வதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அமெரிக்க டாலர்கள்
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை, அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ரூ.8 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்ததும், அவற்றை திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து மதுரையை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்ற பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.