4 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு திருவனந்தபுரம்-மதுரை இடையே இயங்கும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இருமார்க்கமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழ்நாட்டின் மதுரைக்கு அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டிஎண் 16343/16343)இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் கேரளா, தமிழ்நாடு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.50 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 4.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் கொல்லம், சங்கனாச்சாரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவாக, திரிச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் வழியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதுதொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால் ஒப்புதல் என்பது கிடைக்கவில்லை. ரயில்வே பெட்டிகளை சுத்தம் செய்வது, பாம்பன் பாலத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் இருக்கும் சிக்கல் உள்ளிட்டவை தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போது ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வேலை நடக்கிறது. இந்த பணிகள் டிசம்பர் மாதம் வரை நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இதனால் முதற்கட்டமாக இந்த அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட வாய்ப்புள்ளது. பாலப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு முழுவதுமாக இயக்கப்பட உள்ளது.
மேலும் இந்த ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே வாரியம் இப்போது தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இந்த ரயில் சேவை நீட்டிப்பை வரும் நாட்களில் அமலுக்கு கொண்டு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.