புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்றனர். இதில் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சித்தர் செல்வன் (வயது 29), முகி (27), மதுபாலன் (19), முருகன் (57), சிவா (30) ஆகிய 5 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் சுமார் 20 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது படகின் அடிப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டு படகுக்குள் கடல் நீர் புகுந்தது. சிறிது நேரத்தில் படகு முழுவதும் நீர் சூழ்ந்து ஒரு கட்டத்தில் படகு முழுவதுமாக கடலுக்குள் மூழ்கியது. இதனால் அதில் சென்ற 5 மீனவர்களும் படகில் உள்ள டீசல் கேன் மற்றும் மரப்பலகை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு தங்களது படகில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.