ஆவுடையார்கோவிலில் இருந்து நாகுடி வழியாக சுப்பிரமணியபுரத்திற்கு அரசு பஸ் காலை, மாலை என இரு வேளையும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். மாலை நேரத்தில் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என்று ஆவுடையார்ேகாவில் தாசில்தார் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் பலவரசன், கீழ்க்குடி, வாட்டாத்தூர், தொண்டைமானேந்தல் ஊராட்சி பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதலாக பஸ்கள் விட அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தற்சமயம் செல்லும் பஸ்சை பள்ளி மாணவர்களின் நலன்களுக்காக கூடுதலாக ஒரு முறை நாகுடியில் இருந்து தொண்டைமானேந்தல் வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பணிமனை மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.