நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்




நான்குனேரியில் பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அன்னவாசலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல்லை மாவட்டம், நான்குனேரியில் பட்டியல் இனத்தைச் சோ்ந்த பள்ளி மாணவரை பிற சமூகத்தை சோ்ந்த சக மாணவா்கள் வீடு புகுந்து தாக்கினா். இதை தடுக்க வந்த அவரது சகோதரியும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டாா்.

இச்சம்பவத்தை கண்டித்து, அன்னவாசலில் புதிய பேருந்து நிலைய பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஜோஸி (பொ) தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலா் கவிவா்மன் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து கண்டன உரை நிகழ்த்தினாா்.

50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதில், கட்சியின் மாவட்ட செயற்குழுவைச் சோ்ந்த சண்முகம், சலோமி, சுப்பையா, ஜீவானந்தம், ரங்கசாமி, கருப்பையா, தேவராஜன், ரகுபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments