அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!



தூய்மை பணியாளர்கள் அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் 76 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணி புரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை கூறியும், ஊதியம் வழங்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வருகிற 25-ந்தேதிக்குள் ஊதியம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments