அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்று கடிதம் எழுதி ரொக்கப் பரிசுகளைப் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி கடந்த 1-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. போட்டிகள் அனைத்து வயதினருக்கும் (18 வயது வரை ஒரு பிரிவாகவும், 18 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகவும்) நடத்தப்படுகிறது. போட்டிக்கான கடிதத்தை "புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் உள்நாட்டு கடிதம் அல்லது கடித உறை பிரிவில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
உள்நாட்டு கடித பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர் அல்லது நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டும். போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம் / ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம் / ரூ.25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் / ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.