ஆன்லைன் அபராத முறையை கைவிட வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்!



ஆட்டோ டிரைவர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்டோ டிரைவர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் அய்யப்பன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெத்தினவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆட்டோ டிரைவர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். புகைச்சான்று மற்றும் ஸ்டிக்கருக்கு அதிக வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது. மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும். நலவாரியத்தின் மூலம் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments