மணமேல்குடி ஒன்றியத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கோலேந்திரம் வருவாய் கிராமத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் அலுவலர் சிவசங்கரி தலைமை தாங்கி பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்களின் இருப்பு, அதன் முழு விலை மற்றும் மானிய விலை குறித்த முழு தகவல்களையும் விரிவாக எடுத்துக்கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஷ்வரி பேசுகையில், நெல் விதை நேர்த்தி தொழில்நுட்பத்தினை விளக்கமாக செய்து காண்பித்து, அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். மேலும் பயிற்சியில், கோடை உழவு செய்வதன் நன்மைகள், மண் மாதிரி முக்கியத்துவம், ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள், இயற்கை விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி விளக்கம் அளிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.