பரமக்குடி ரயில் நிலையத்தில் நவாஸ்கனி எம்.பி. திடீரென ஆய்வு செய்தார். அப்போது ரயில் பயணிகளிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை பார்வையிட்டு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ெரயில் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது பரமக்குடி வியாபாரிகள் சங்கம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், கைத்தறி நெசவாளர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் சரக்குகளை பாதுகாப்புடன் வைப்பதற்கு சரக்கு குடோன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இராமேஸ்வரத்திலிருந்து புறப்படுகின்ற அடியிற்காணும் இரயில்கள் பரமக்குடி இரயில்வே நிலையத்தில் நின்று செல்ல தாங்கள் பரிந்துரை செய்ய வேனுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
விவரம்
1. இராமேஸ்வரம் முதல் செகந்திராபாத் - 07696.
2. இராமேஸ்வரம் முதல் அஜ்மீர் ஹம்சபர் - 20974
3.இராமேஸ்வரம் முதல் அயோத்யா - 22613
4. கன்னியாகுமரி முதல் இராமேஸ்வரம் - 22622
இவை தவிர நம் மாவட்டத்திலிருந்து தலைநகர் சென்னைக்கு அதிக அளவில் மக்கள் இரயிலில் பயணிக்கின்றனர். தற்சமயம் இரண்டு இரயில்கள் மட்டுமே நம் மாவட்டதிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இதனால் பல பயணிகள் நெருக்கடியிலும், கூட்ட நெரிசலிலும் சிரமப்பட்டு பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது மற்றும் பல பேர் இடம் கிடைக்காமலும் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இந்நிலை போக்க இராமேஸ்வரம் முதல் சென்னைக்கு (வழி திருவாரூர்) கூடுதல் இரயில்கள் Dr.APJ அப்துல்கலாம் அவ்ர்கள் பெயரில் இயக்க வேண்டும் என்றும் மாவட்ட மக்களின் சார்பாகவும். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாகவும் தாங்கள் சிபாரிசு செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.