அறந்தாங்கி அனைத்து நகர ஆட்டோ சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. சார்பில் அறந்தாங்கி செக்போஸ்ட்டில் இருந்து ஆட்டோ சங்க உரிமையாளர்கள் ஆட்ேடாவில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர ஆட்டோ சங்க கவுரவ தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சேகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும். எப்.சி.க்கு செல்லும் ஆட்டோவிற்கு புகை சான்று மற்றும் ஸ்டிக்கர்களுக்கு அணியாய கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தாதே மற்றும் தேர்தல் வாக்குறுதி படி புதிய ஆட்டோ வாங்குவதற்கு மானியம் வழங்கிட வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். ஆட்டோ தொழிலாளர் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்து வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.