புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை செப்டம்பர் 09 சனிக்கிழமை நடக்கிறது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்




பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம், அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார் (கு.பொ.வ), வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம். பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments