மணமேல்குடி ஒன்றியத்தில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையங்களில் நடைபெற்றது




இன்று  மணமேல்குடி ஒன்றியத்தில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும்  அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் தொடக்கநிலை அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு கற்றல் மையங்களில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலஸ்தானம், மும்பாலைப்பட்டினம்  கொடிக்கம்பம் , நிலையூர், விச்சூர் மணக்காடு, புதுக்குடி, ரெட்டையாளம்  போன்ற 
 புதிய பாரத கற்றல் மையங்களின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் 
மரக்கன்று நடும் விழாவினை கற்போர்கள் உதவியுடன்  நடைபெற்றது.

 இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்  மேலஸ்தானம் நடுநிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி மற்றும் ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்னண் ஆகியோர் 
மேலஸ்தானத்தில் நடைபெற்ற மரக்கன்று நடு விழாவில் கலந்து  கொண்டார்.

 ஆசிரியர் பயிற்றுநர்கள்  தலைமை ஆசிரியர்கள்  தன்னார்வலர்கள் கற்போர்கள் கலந்து கொண்டனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments