தொண்டி பேரூராட்சியில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வது தொடர்பான கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வர்த்தக சங்கத்தினர், வணிகர் சங்கப்பிரதிநிதிகள், தனியார் வாகன ஓட்டுனர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வணிக நிறுவனங்கள் சாலை ஓரங்களில் உள்ள தங்களின் ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட தேதிக்குள் அகற்றிக் கொள்ள தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலை துறை பேரூராட்சி, வருவாய் துறை, காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.