ரயில் நிலையம்
அதிராம்பட்டினம் ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் வழியாக காரைக்குடி, திருவாரூர், எர்ணாகுளம், வேளாங்கண்ணி, தாம்பரம், ஆகிய பகுதிகளுக்கு ெரயில்கள் சென்று வருகின்றன.
இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம்.மையம் இல்லை. இதனால் பயணிகளுக்கு அவசர தேவைக்காக பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.
பயணிகள் அவதி
பெரும்பாலான பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் ரயில் பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். பலர் ரெயில் நிலையத்துக்கு சென்று பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குகின்றனர். இதனால் பயணிகள் அனைவருமே வரிசையில் நின்று நேரடியாக பணம் கொடுத்துதான் பயணச்சீட்டு எடுத்துச்செல்கின்றனர்.
ரயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் இருந்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பணம் எடுக்க ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள பஸ் நிலையம் அல்லது கடற்கரை சாலையில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் எடுத்து வருகின்றனர்.
ஏ.டிஎம். மையம் அமைக்க வேண்டும்
வெளியூர்களில் இருந்து அதிராம்பட்டினம் வரும் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். எனவே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
News Credit : Daily Thanthi
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.