அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏகணிவயல் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது மீராஷா (வயது 43). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரகுமத் நிஷா. இவர் தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், இருவரும் நேற்று மைவயல் கிராமத்தில் உறவினர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரகுமத் நிஷா வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினி, ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த நாகுடி போலீசார் மற்றும் அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்ைட உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.