மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கடல் விரால் மீன் ரூ.15 ஆயிரம் ஏலம் போனது




ஜெகதாப்பட்டினம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இந்த நாட்டுப்படகுகளில் தினந்தோறும் கடலுக்கு மீனவர்கள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில், மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்று விட்டு பின்னர் கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் 30 கிலோ எடை கொண்ட கடல் விரால் மீன் சிக்கியது. இந்த வகையான மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவது மிகவும் அரிதானது. இந்த விரால் மீனை ஏலத்தில் வியாபாரி ஒருவர் ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கி சென்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments