கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி நடைபெறுவதாகவும், உஷாராக இருக்கவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆன்லைன் மோசடி
நவீன காலத்தில் தற்போது சைபர் கிரைம்கள் அதிகரித்தப்படி உள்ளது. ஆன்லைனில் பண மோசடி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தல் உள்பட பல்வேறு முறையில் மோசடி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் மர்மநபர்கள் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவலில் லிங்க் அனுப்பி அதில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.
குறைந்த வட்டியில் கடன் தருதல், பரிசு விழுந்ததாக கூறி நம்ப வைத்தல், வேலைக்கு ஆட்கள் தேவை, ஆன்லைனில் வேலை கைநிறைய சம்பளம் என ஆசைவார்த்தை கூறி அவர்களை நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது அவர்களது வங்கி கணக்கில் இருந்து மறைமுகமாகவோ பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் ஏமாந்து கொண்டு தான் உள்ளனர்.
கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி
இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி நடைபெறுவதாகவும், மாணவர்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இது தொடா்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட போலீசாரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பகிா்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி கல்வி அதிகாரி போல தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மோசடி நபர்கள் அனுப்பும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்று வரும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.