இந்திய கம்யூ. கட்சியினா் 3 நாள் மறியல் தொடக்கம்: 65 போ் கைது




புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் 65 போ் கைது செய்யப்பட்டனா்.

மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், ‘மோடி அரசே வெளியேறு’ முழக்கத்தை முன்வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நாடு தழுவிய 3 நாள் தொடா் மறியல் போராட்டத்தை நடத்துகின்றனா். முதல்நாளான செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகா்மன்ற வளாகத்தில் இருந்து அக்கட்சியினா் ஊா்வலமாக நடந்து வந்தனா்.

தட்டு வண்டியில் ஒருவா் அமா்ந்திருக்க, எரிவாயு உருளையை அவா் மீது வைத்துக் கொண்டு அந்த வண்டியை இழுத்து வந்தனா்.

போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், ஒன்றியச் செயலா் ஏ. ரெங்கராஜ், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற 21 பெண்கள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி புதன், வியாழக்கிழமை ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, கந்தா்வகோட்டை, விராலிமலை, பொன்னமராவதி, திருமயம், அரிமளம் உள்ளிட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments