புதுக்கோட்டை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விளக்கத்தை புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அமீர் பாஷா விளக்குகிறார்.
அவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உலமா மற்றும் பணியாளர் நல வாரியம் இயங்கி வருகிறது. மேலும் வகுப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 5 ஆண்டுகள் குறையாமல் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு அதாவது இமாம், மோதினார் போன்ற வகுப்பை சார்ந்தவர்களுக்கும் பள்ளிவாசல்களில் பணி புரிபவர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
உலமாக்களுக்கு பைக் வாங்க மானியம்
45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த மானியத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தினை அளிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அளிக்கும் போது விண்ணப்பதாரரின் முகவரி, ஆதார், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அத்தோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இடம் 5 ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான சான்றுடன், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான ரசீதுடன் விண்ணப்பத்தினை வழங்கினால் உடனடியாக 25 ஆயிரம் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே இதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.