கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியை சூழ்ந்த கருமேகங்கள் கூட்டம் கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் மிதமான மழை




கோபாலப்பட்டிணம்‌ மீமிசல் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 25 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது இந்தநிலையில் இன்று செப்டம்பர் 18 திங்கட்கிழமை அதிகாலை முதல் காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது  வெப்பம் தணிந்து மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது. 

தற்போது பெய்த  மழையினால்  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments