அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 18.09.2023 திங்கள்கிழமையன்று செயல்வீரர்கள் கூட்டம், அறந்தாங்கி தவ்ஹீத் மர்க்கஸில்  நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் குலாம் முகமது பாட்ஷா தலைமை வகித்தார்.

சிறப்பு பேச்சாளராக TNTJ மாநிலப் பேச்சாளர் பா.அப்துர் ரஹ்மான் அவர்கள் 
மவ்லீதை ஒழிப்போம்! மாநபிவழி நடப்போம்!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டப் பொருளாளர் சித்திக் ரகுமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜேந்திரபுரம் மீரான், புதுகை மீரான், மாவட்டத் தொண்டரணிச் செயலாளர் காஜா மைதீன், மாவட்ட வர்த்தகரணிச் செயலாளர் ரபீக் ராஜா மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் சபியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியாக மாவட்ட தொண்டரணி செயலாளர் ஹாஜா முஹைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. மவ்லீதை ஒழிப்போம்!
மாநபிவழி நடப்போம்!! 

முஸ்லீம் சமூகத்தினரிடத்தில் இஸ்லாமிய மார்கத்தில் இல்லாத மீலாது மற்றும் மெளலீது என்ற  மூடபழக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்தில் இல்லாத இந்த மூடப்பழக்கத்தை முஸ்லீம்களிடம் இல்லாமல் ஒழிப்பதற்கு இரண்டு மாத காலம் தீவிர பிரச்சாரம் மேற்கொன்டு  பொதுமக்களிட முள்ள இந்த மூட பழக்கத்தை ஒழிப்பதற்கு தீவிரமாய் பாடுபடுவதென்று  இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நீண்டகால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்க

2. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.   ஆனால்  நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் மட்டும் விடுதலை செய்யப்படுவது இல்லை.
அறிஞர் அண்ணாபிறந்த தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதற்காக உரிய பட்டியலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக அறிகிறோம், இம்முனெடுப்பு பாராட்டுக்குரியது அதே நேரத்தில் இறுதி வரை இச்சிறைவாசிகளின் விடுதலைக்காக உரிய முயற்சிகளை எடுத்து அவர்களின் விடுதலைய உறுதி செய்ய வேண்டும் என  இச்செயல்வீரர்கள் கூட்டம் வாயிலாக 
கேட்டுக்கொள்கிறோம். 

சிறைச்சாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சில இஸ்லாமிய சிறைவாசிகள் மரணமடைந்துள்ள வேளையில் , மீதம் உள்ளவர்களையாவது விடுதலை செய்வது சமநீதியை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு எடுக்க வேண்டும், வழக்கம் போல் ஆளுநர் மீது பழி போடாமல் நீட் விவாகரத்தில் எவ்வாறு ஆளுநரை எதிர்த்து பணிகள் நடைபெறுகிறதோ அது போன்று இவர்களை நியாயமான முறையில் விடுதலை செய்வதற்கான சட்ட முன்னெடுப்புகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்த இச்செயல் வீரர்கள் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 


இடஓதுக்கீட்டை உயர்த்துக ! , வெள்ளை அறிக்கை வெளியிடுக

3. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது,  மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படாமல் அலைக்களிக்கப்படுகின்றனர் ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகளும் உள்ளன தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் , தமிழகத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இந்த செயல்வீரர் கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

ஜனநாயகப் படுகொலைகள்

4. ஆளும் ஒன்றிய பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும் , ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இந்தியா எனும் நாட்டின் பெயரை எதிர்கட்சிகள் உருவாக்கியுள்ள
INDIA எனும் கூட்டணியின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக பாரத் என்று மாற்றி சில நாட்களாக ஒன்றிய அரசின் கடிதப்போக்குவரத்து அமைந்துள்ளது., இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, மக்களாட்சி என்பது மக்கள் பங்கேற்கும்ஆட்சி, ஆனால் ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்பிற்காக நடக்கும் இது போன்ற கேலிக்கூத்துக்கள் மட்டுமல்லாமல் பல அத்துமீறல்களும் தொடர்ந்து நடந்து வருகிறது G20 நிகழ்விற்காக உலகத்தலைவர்கள் வரக்கூடிய நேரத்தில் G20 நிகழ்வுகளில்பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் காங்கிரஸின் மல்லிகார்ஜுனா கார்கே தவிர்க்கப்பட்டுள்ளார், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் விஷமத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவிலும் முக்கிய எதிர்கட்சியில் தலைவரான இவர் தவிர்க்கப்பட்டுள்ளார் , ஜனநாயக ஆட்சி என்பது ஆளும் கட்சியும் , எதிர்கட்சியும் தங்களின் பங்களிப்பை செய்து நடப்பது தான் ஆனால் அதை ஆளும் இவ்வரசு திட்டமிட்டு மீறுகிறது, மணிப்பூரில் இன்றும் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன , சமீபத்திய வன்முறையில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், இதை ஆளும் ஒன்றிய அரசு வேடிக்கைப்பார்க்கிறது, இது போன்ற ஜனநாயகப் படுகொலைகளை இச்செயல் வீரர் கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம்.
 
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி பறிப்பு

5. ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறையின் சார்பாக வழங்கப்படும்   Post Metric Scholarship ஐ பெறுவதற்கு BIO metric முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என இறுதி நேரத்தில் ஒன்றிய அரசின் சார்பாக வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது, இந்த புதிய வழிமுறையால் ஏறக்குறைய 20 இலட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு சிறுபான்மை மாணவர்களான இஸ்லாமிய, கிறித்தவ, சீக்கிய, பவுத்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதைப்போன்று சுமார் 830 போலி கல்வி நிறுவனங்கள் மூலம் சுமார் 144 கோடி ரூபாய் வரை சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது , இது குறித்து CBI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள இச்சூழலில் சிறுபான்மை மாணவர்களை பாதிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments