திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தாளாளர் சைமன் ராஜ் வரவேற்றார். விழாவில் 157 மாணவ, மாணவிகளுக்கு கருமாணிக்கம் எம்.எல். ஏ. சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது பள்ளியின் சார்பில் கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும், பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, கோடனூர் கணேசன், ஓரியூர் திருத்தல அதிபர் ஆல்பர்ட் முத்துமாலை, பொருளாளர் ரபேல் அலெக்சாண்டர், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்கள் முருகானந்தம், மரியஅருள், ஓரியூர் மனோகரன், ஓரியூர் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புலியூர் வெங்கடேசன், வெள்ளையபுரம் பரக்கத்அலி, ஊராட்சிமன்ற தலைவர் நிரோஷா கோகுல், ஊராட்சி துணை தலைவர் அசரப் அலி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.