மணமேல்குடி வட்டார வள மையத்தில் எண்ணும் எழுத்தும் - முன் திட்டமிடல் கூட்டம்




முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார  வளமையத்தில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் ஆங்கில பாடத்திற்கு தொடங்கியது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய 
திரு இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் ஆங்கில பாடத்திற்கான கருத்தாளர்கள் கலந்து கொண்டு இது நமது நேரம், மாணவர்களள ஆயத்தப்படுத்தும் செயல்பாடுகள்,  மின் அட்டைகளைக் கொண்டு எளிய முறையில் கற்பித்தலுக்கான உபகரணங்கள் தயாரித்தல் போன்ற  கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு பணியில்  ஆசிரியர்கள் 
ரவி. கிரேஸி மேரி, நிலோபர் நிஷா மற்றும் உம்மு ஹபிபா  தஸ்னிம் ஆகியோர் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து 
கணிதம் தமிழ் பாடத்திற்கான கற்றல் கற்பித்தல்  உபகரணங்கள் தயாரிப்பு பணிமனை  கூட்டம் நடைபெறும்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments