புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 படகுகள் கலந்து கொண்டன. போட்டியில் கலந்து கொண்ட படகுகள் பந்தய எல்லை தூரத்தை கடந்து திரும்ப கரைக்கு வந்தன.
இதில் முதல் பரிசு ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை ஊரை சேர்ந்த படகும், இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த படகும், நான்காம் பரிசு ரூ.20 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலை சேர்ந்த படகும் தட்டிச் சென்றன. பின்னர் வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. பாய்மர படகு போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து கண்டு களித்தனர்.
இதில் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.