ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரியா குப்பு ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அமரடக்கி சரண், மீமிசல் ரமேஷ், ஒக்கூர் அல்லி முத்து ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரால் காலை சிற்றுண்டி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து தட்டு, டம்ளர் வழங்கியதாக கணக்கு உள்ளது. அந்த திட்ட தொடக்க விழாவிற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என்று கூறினார்கள். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எங்களிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் நீங்களாக வழங்கி விட்டீர்களா, எங்களுக்கு கூறக்கூடாதா என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கலெக்டர் திடீர் என்று ஆரம்பிக்க சொன்னதாலும், நாள் குறைவாக இருந்ததால் யாரிடமும் சொல்லமுடியவில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். புண்ணிய வயல் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தில்குமரன்:- எங்கள் பகுதியில் மின்மாற்றிக்கு இரு மின்கம்பங்கள் நட வேண்டும், அதனை உடனடியாக நட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பொன்பேத்தி உறுப்பினர் சுந்தரபாண்டியன்:- நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆர்.ஆர். திட்டத்தில் வரவேண்டிய சாலைகளை நமது பகுதிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீமிசல் உறுப்பினர் ரமேஷ்:- எங்கள் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட குழாய் பணி இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது அதற்குள்ள நிதியும் வராதால் ஒப்பந்ததாரர்கள் அதை கிடப்பில் போட்டுள்ளனர். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாம்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி:- ஏரிகளில் மடைகள் சிதலமடைந்து உள்ளதால் அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். அமரடக்கி உறுப்பினர் சிவசங்கர் உள்பட உறுப்பினர்கள் பலர் பேசினர். முன்னதாக ஒன்றிய அலுவலர் முருகையா தீர்மானங்களை வாசித்தார். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.