பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் 20. 9. 2023 புதன்கிழமை மதியம் பட்டுக்கோட்டை பெரிய தெருவில் உள்ள அரசு இன்ஸ்டியூட்டில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
கருத்தரங்கினை பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் தலைமை ஏற்றுதுவங்கி வைத்தார்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பட்டுக்கோட்டை கிளை சேர்மன் டி சுவாமிநாதன் மற்றும் பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கத்தின் ஆலோசகர் சந்திர பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அரசு இன்ஸ்டியூட்டின் நிறுவனர்
சிவ. நாடிமுத்து வரவேற்பு ஆற்றினார்
கருத்தரங்கில் பட்டுக்கோட்டை ரயில் நிலைய தலைமை அதிகாரி கே மருது பாண்டியன் கலந்து கொண்டு பேசும் போது "இந்தியன் ரயில்வேயின் தோற்றம், அதன் வளர்ச்சி, இரயில்வேயின் சாதனைகள், இருப்பு பாதைகளில் வகைகள், பயணிகள் ரயில்களின் வகைகள், சரக்கு போக்குவரத்து ரயில்கள்,ரயில்வே போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் விதம், கட்டண சலுகைகள், ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு ரயில்வே சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்
கூட்டத்தில், நிறுவனத்தின் சார்பில் இரயில் சுற்றுலா செல்லுதல், இரயில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல், பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்களில் தூய்மை செய்தல், மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் போன்ற பணிகளை செய்ய முடிவு
செய்யப்பட்டது
நிறைவாக பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் வ.விவேகானந்தம் நன்றி கூறினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.