ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி செல்லும் ஷ்ரத்தா சேது அதிவிரைவு ரயில் காரைக்குடி & இராமநாதபுரம் ஸ்டேஷனில் நிறுத்தப்பட உள்ளது.
2017ம் ஆண்டு பிரதமர் மோடி ராமேஸ்வரம் பைசாபாத் இடையே ரயில் சேவையை தொடங்கி வைத்தார். விஜயவாடா, நாக்பூர், ப்ரயாக்ராஜ் அயோத்யா செல்லும் இந்த ரயில் காரைக்குடி & இராமநாதபுரம் நின்று செல்வதற்கு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
தற்போது ஷ்ரத்தா சேது அதிவேக விரைவு ரயில், இனி இராமநாதபுரம் காரைக்குடியில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அயோத்தி - இராமேஸ்வரம்
அயோத்யாவில் இருந்து செப்.20 முதல் புதன்தோறும் இரவு 11:10க்கு புறப்பட்டு
ப்ராயக்ரஜ், இடார்சி, நாக்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக
காரைக்குடிக்கு வெள்ளி தோறும் இரவு 11: 08 மணிக்கும் இராமநாதபுரத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 1.23 மணிக்கு வந்து பின்னர் ராமேஸ்வரம் செல்லும்...
இராமேஸ்வரம் - அயோத்தி
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிறு இரவு 11:55 க்கு புறப்பட்டு செப்.24 முதல் திங்கள் தோறும் இராமநாதபுரத்தில் அதிகாலை 12.48 மணிக்கு வந்து, காரைக்குடிக்கு
அதிகாலை 2:58 மணிக்கு வந்து
திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை எழும்பூர் , விஜயவாடா , நாக்பூர், இடார்சி, பிராயக்ரஜ் வழியாக
அயோத்தி புதன்கிழமை காலை 4:55 மணிக்கு செல்லும்..
தமிழ்நாட்டில் அயோத்தி - இராமேஸ்வரம் வாரந்திர ரயில் இருமார்க்கதிலும் நின்று செல்ல ஊர்கள்
சென்னை எழும்பூர்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை,
கும்பகோணம்,
தஞ்சாவூர்,
திருச்சி,
காரைக்குடி,
மானாமதுரை,
இராமநாதபுரம்,
இராமேஸ்வரம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.