கோபாலபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானம் முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய 3வது மாபெரும் இரத்ததானம் முகாம் கோபாலப்பட்டினம் தவ்ஹீத் மர்க்கஸில் 23-9-2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
கிளை தலைவர் செய்யது இப்ராஹிம் கிளை பொருளாளர் அப்துல் ரசாக் கிளை துணை தலைவர் ஹிதாயத்துல்லா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உறுப்பினர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்...
நன்றியுரை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா அவர்கள் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்களிப்பு செய்த மற்றும் இரத்த வங்கி மேலாளர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 31 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது இரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள்...
என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.