கோபாலபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானம் முகாம்




கோபாலபட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய  இரத்ததானம் முகாம் நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கோபாலபட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய 3வது மாபெரும் இரத்ததானம் முகாம் கோபாலப்பட்டினம் தவ்ஹீத் மர்க்கஸில் 23-9-2023 சனிக்கிழமை அன்று  நடைபெற்றது.

கிளை தலைவர் செய்யது இப்ராஹிம் கிளை பொருளாளர் அப்துல் ரசாக் கிளை துணை தலைவர் ஹிதாயத்துல்லா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உறுப்பினர்கள்,  பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்...

நன்றியுரை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா அவர்கள் கூறும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில்  பங்களிப்பு செய்த  மற்றும் இரத்த வங்கி மேலாளர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவிற்கும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 31 யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது இரத்தம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் டாக்டர்  ராதாகிருஷ்ணன்  அவர்கள் வழங்கினார்கள்...

என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments