ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் பருவ தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று கூறப்பட்டது. அதேபோன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் 2 கட்டங்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளதால் காலாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.ஆனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 3 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.