புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
சிமெண்டு பூச்சுகள் விழுந்தது
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இதில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவது வழக்கம்.
இதனால் பழமையான இந்த பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் காரைக்குடி பஸ் நிறுத்த பகுதியில் மேற்கூரையில் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சிறிது விழுந்தது.
தாய்-மகன் படுகாயம்
இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம் செருவாவிடுதி பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் மீது விழுந்ததில் படுகாயமடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெயர்ந்து விழுந்த சிமெண்டு பூச்சுகள் ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மேற்கூரை பெயர்ந்து விழுந்த பகுதியை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேரையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.