நோயற்ற வாழ்க்கைக்கு தூய்மையான சுற்றுப்புறம் அவசியம் காவல்துறை கூடுதல் ஆணையாளர் அறிவுரை
தென்னக இரயில்வே திருச்சி கோட்ட இரயில்வே முதுநிலை வணிக மேலாளர், திருச்சி கோட்ட இரயில்வே உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை யின்படி பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழாவையும் மரம் நடும் துவக்க விழாவையும் நடத்தினார்கள் .
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட இரயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான என் .ஜெயராமன் தலைமையேற்று விழாவை துவங்கி வைத்தார். லயன் சங்கத் தலைவர் ரெ.அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் டி. சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவேற்புரை ஆற்றினார் .
புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் ஆர் .சத்தியசுந்தரம் ஐபிஎஸ் தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .
அவர் பேசும்போது "மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம்.
எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.
அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.
மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும்
என்று கூறினார்
நிகழ்ச்சியில் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
அரசு நிறுவன நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி கே. மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆ ராமமூர்த்தி, வே. சுப்பிரமணி ,கோ.சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஏ.கே.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
பட்டுக்கோட்டை சரக்கு முனையம் அருகில் வளர்ந்திருந்த கருவேலங்காடுகளை அழித்து கொடுத்த பட்டுக்கோட்டை நகராட்சிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
லயன்ஸ் கிளப் மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சரக்கு முனைய சாலையில் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது
முடிவில் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் வ விவேகானந்தம் நன்றி கூறினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.