830 ரூபாய் டிக்கெட் 3.50 மணி நேரம் பயணம் சென்னை ⇋ திருச்சி இடையே வந்தே பாரத் ரயிலில் செல்லலாம்.



P



சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் முன்பதிவானது தொடங்கி உள்ளது. அதில் திருச்சி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை-திருச்சி வந்தேபாரத் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வந்தே பாரத் ரயிலானது சுமார் 40-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

​கனவு திட்டம்

பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால் பிரதமர் மோடியே ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்று நேரடியாக ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தென்தமிழகத்திற்கு முதலாவதாக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

​சோதனை ஓட்டம்

அறிவிப்பு வெளியானதில் இருந்து மக்கள் அதிகளவில் எதிர்ப்பார்ப்புடம் இருந்து வந்தனர். இந்நிலையில் மக்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. வந்தே பாரத் ரயிலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
.
செவ்வாய்க்கிழமை தவிர....

இந்நிலையில் தற்போது இந்த ரயிலை பிரதமர் மோடி கானொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிகிறது.

​முன்பதிவு
தற்போது இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது. அதில் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு தொடங்கி திருச்சிக்கு 6.40 மணிக்கு வந்தடைகிறது. இதற்கான பயண நேரம் 3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.

​டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

இந்த ரயிலுக்கான டிக்கெட் கட்டணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏசி சேர் கார் கட்டணமாக 895 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணமாக 1,740 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி தாம்பரத்திற்கு 3.15 -க்கு வந்தடையும்.

​5 நிமிடங்கள்

அதன்பின்னர் 3.17-க்கு கிளம்பி விழுப்புரத்திற்கு 4.41 மணிக்கு வந்தடையும். பின்னர் 4.43 -க்கு கிளம்பி திருச்சிக்கு 6.45-க்கு வந்தடையும். திருச்சியிலும் மதுரையிலும் 5 நிமிடங்கள் இந்த ரயிலானது நின்று செல்லும். இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் அடுத்ததாக திருநெல்வேலியை சென்றடையும்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments