புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி உள்பட 5 மாவட்டங்களில் ரூ.71½ கோடியில் மீன்பிடி இறங்குதளம் புதிய கட்டிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் ரூ.71½ கோடியில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீன்வளத்துறை புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

மீன்பிடி இறங்குதளம்

தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையில் 30 கோடி ரூபாய், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடி செலவிலும் மீன்பிடி இறங்கு தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் ரூ.8 கோடி செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும் புதிய மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மரபணு ரீதியாக திலேப்பியா மீன் விதை பண்ணை மேம்படுத்தப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 66 தங்கும் அறைகளுடன் சுமார் 220 மாணவ-மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.71½ கோடியில் கட்டிடம்

மொத்தம் ரூ.71 கோடியே 55 லட்சம் மதிப்பிலான மீன்பிடி இறங்குதளம் மற்றும் புதிய கட்டிடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments