வங்க கடலில் பலத்த காற்று வீசும்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அறிவிப்பு




வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று (சனிக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments