பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா.. இன்று செப்டம்பர் 13 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது




பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


ரயில்கள் முன்பதிவு

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கும். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று செப்டம்பர் 13 காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!!!

தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2024ம் வருடம் - ஜனவரி 15 திங்கள் அன்று கொண்டாடப்பட உள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ------- பயண நாள் --- பயண கிழமை

செப்டம்பர் 13-----  ஜனவரி 11- 2024 ---- வியாழன்

செப்டம்பர் 14 ----- ஜனவரி 12-2024 ----- வெள்ளி

செப்டம்பர் 15 ----- ஜனவரி 13-2024 --- சனி

செப்டம்பர் 16 --- ஜனவரி 14-2024 -- ஞாயிறு -- போகிப் பண்டிகை 

செப்டம்பர் 17 --- ஜனவரி 15-2024 -- திங்கள் -- தைப்பொங்கல் தினம்

செப்டம்பர் 18 -- ஜனவரி 16-2024 -- செவ்வாய்--  மாட்டுப்பொங்கல்,
திருவள்ளுவர் தினம் 

செப்டம்பர் 19 -- ஜனவரி 17-2024 -- புதன் - உழவர் திருநாள்

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்........

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments