அம்மாப்பட்டிணம் கடற்கரையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை & மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் பனை விதை நடும் நெடும் பணி அமைச்சர்கள் ரகுபதி & மெய்யநாதன் தொடங்கி வைத்தார்கள்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 14 மாவட்டங்கள் 1076 கிலோமீட்டர் தூரத்திற்கு 1கோடி பனைவிதைகள் நடும் நெடும் பணியின் ஒரு பகுதியாக அக்டோபர் 01 புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரையிலான 43 கிலோமீட்டர் தூரத்திற்கு புன்னகை அறக்கட்டளை, சீனியார் அறிவகம் இணைந்து முன்னெடுக்கும் பனைவிதைகள் நடும் திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டிணத்தில் கலந்து கொண்டு நிகழ்வினை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் M.C.A., புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், கழக மாவட்ட சுற்றுச்சூழல் அணி - தலைவர்- துணை தலைவர் - அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்த இடங்கள்:
1.கட்டுமாவடி
2.கிருஷ்ணாஜிப்பட்டினம்
3.கண்டனிவயல்
4.மும்பாலை
5.மணமேல்குடி
6.ஆவுடையார்பட்டினம்
7.அம்மாப்பட்டினம்
8.வன்னிச்சிப்பட்டினம்
9.கோட்டைப்பட்டினம்
10.பாலக்குடி
11.குமரப்பன்வயல்
12.கோபாலப்பட்டினம்
13.சேமங்கோட்டை
14.முத்துகுடா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.