பட்டுக்கோட்டை அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று 03. 10. 2023 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சதெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் என் வீரமணி அனைவரையும் வரவேற்றார். முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 30 பேரும் தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.
முகாமில் முதலாவதாக பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகம் நடைமேடை, ரயில் பாதைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள புதர்களை அழித்தார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினார்கள்.
பட்டுக்கோட்டை ரயில் நிலைய தலைமை அதிகாரி கே மருத பாண்டியன் இந்தியன் ரயில்வேயில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும் இரயில்கள் இயங்கும் முறைமைகள் சிக்னல் பற்றியும் விளக்கம் அளித்தார்
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் தேர்வுக்கு தயாராகும் முறை பற்றியும்,
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் வவிவேகானந்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் இரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிப்பது பற்றியும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி இளையராஜா ரயில்வே பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்
பின்னர் மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில் தேசிய மாணவர் படை திட்ட அதிகாரி வி மாரிமுத்து நன்றி கூறினார்
News Credit : Pattukottai Rail Association
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.