ராமநாதபுரத்தில் ரூ.20 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதிய பஸ் நிலையம்
ராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த பஸ் நிலையத்தை இடித்துவிட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அதே இடத்தில் ரூ.20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. இதனிடையே ராமநாதபுரத்தில் நகராட்சி சார்பில் ரூ.20 கோடி நிதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சுமார் 150 மீட்டர் நீளத்திலும், 120 மீட்டர் அகலத்திலும் பஸ் நிலையம் கட்டுவதற்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன. இதில் ஒவ்வொரு தூண்களும் சுமார் 4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஓராண்டுக்குள் முடிக்க
ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர பஸ் நிலையத்தில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் வந்து செல்ல வசதியாக தனி பாதையும் அமைக்கப்பட உள்ளன. இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கும் தனியாக வாகன நிறுத்துமிடமும், 100-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகளும் கட்டப்பட உள்ளன.
இந்த கட்டுமான பணிகளை நகர சபை தலைவர் கார்மேகம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 20 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.