சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அண்ணாநகர் புதுதெருவை சேர்ந்த சின்னபிள்ளையின் மகன் ராஜா. மீனவரான இவர் புதுதெரு கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று விட்டு கரை திரும்பி உள்ளார். அப்போது தனது வலையில் ஆமை ஒன்று சிக்கியதை பார்த்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த மீனவர்களுடன் ஆமை உயிருடன் இருக்கிறதா? என ராஜா பார்த்தபோது, அது அரிய வகை கடல் ஆமை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ஆமையை ராஜா, சக மீனவர்களுடன் மீண்டும் கடலுக்குள் விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி ஆகியோர் மீனவர் ராஜாவை பாராட்டியதோடு, வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமையை மீண்டும் பத்திரமாக கடலில் விட்டதற்காக மீனவருக்கு ரொக்கம் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.