கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடை
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடை கடந்த 19-ந் தேதி திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் அந்த கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.
இந்தநிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமரச கூட்டம்
இதையடுத்து, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகர் சங்க கூட்டமைப்பின் சார்பில் பழனியப்பன், ரவி, குணசேகரனும், எதிர்தரப்பு சார்பில் பாண்டியன், அரசு சார்பில் கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் பாட்ஷா, கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, மாவட்ட மதுபானக்கூட உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணலாம் என்றும் அதுவரை 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் முடிவு ெசய்யப்பட்டது. பின்னர் இருதரப்பை சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.