நகைகள் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து 41 பவுனை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
நகைகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நகைகள் கடந்த செப்டம்பர் மாதம் திருட்டு போனது. இதேபோல கடந்த ஜூன் மாதம் கீழாநெல்லிக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தரிடம் நகை காணாமல் போனது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும் மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையின் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நச்சாந்துபட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 41 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.