பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரி, ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் இருந்து குளத்துக் குடியிருப்பு, பெருநாவலூா் வழியாக காரைக்குடி மற்றும் அறந்தாங்கி செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைத்துத் தரக் கோரி, அப்பகுதி மக்கள் பல முறை போராட்டம் நடத்தியும் சாலை செப்பனிட்டுத் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும் இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சி. சுப்பிரமணியன் தலைமையில் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் செல்வராஜ்,
காா்த்திகேயன், மணிமுத்து உள்ளிட்டோா் புதன்கிழமை திடீரென ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூடி அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் ஜனவரி மாதத்துக்குள் இச்சாலை செப்பனிட்டு தருவதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.