புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிறைவு நாள் கலை திருவிழாவில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.
 இந்நிகழ்வில் கலைக்குழு உறுப்பினர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு இளங்கோவன் அவர்கள் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு.செழியன் அவர்கள் மற்றும் திருமதி இந்திராணி அவர்கள்
 அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளித் துணை திரு.இளையராஜா ஆய்வாளர் மணமேல்குடி வட்டார  வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள், கலைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இன்று ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நடைபெறுகின்ற  குழு நடனம் மற்றும் தனி நடனம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia





0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.