ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் காரைக்குடி வழியாக ரெயில் இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரிக்கு தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகல் நேர ரெயில்
காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, இந்திய ரெயில்வே போர்டு தலைவர், மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வின்வைஷ்ணவ் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தென்கிழக்கு மாவட்டங்களில் வசித்து வரும் சாதாரண மக்கள் பகல் நேரத்தில் சென்னை செல்ல வேண்டுமானால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் காரைக்குடி வழியாக ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கும் பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு பகல் நேரத்தில் ரெயில்கள் இயக்கினால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டணம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் இந்த ரெயிலை அதிகளவில் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
நின்று செல்ல வேண்டும்
அத்துடன் கோவைக்கு நாகூரில் இருந்து திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக புதிய ரெயிலும் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கப்படும் இந்த ரெயிலை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், டெல்டா பகுதி மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் வரையிலும் நீட்டிப்பு செய்துள்ள நிலையில் இந்த ரெயிலை காரைக்குடி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.