S.P பட்டினம் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது




ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய 10அடி நீளமுள்ள டால்பினை மீட்ட வனத்துறையினர் மீண்டும் கடலுக்குள் விட்டனர்.


எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு டால்பின் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.

வனத்துறையினர் டால்பின் உடலை தொட்டுபார்த்த போது உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த படகு மூலம் டால்பினை சிறிது துாரம் வரை ஏற்றிச் சென்று கடலுக்குள் விட்டனர். பின்னர் அது நீந்தி சென்றது.

வனத்துறையினர் கூறியதாவது: 10அடி நீளம் கொண்ட இந்த டால்பின் ஒரு டன் எடையுள்ளது. உடலில் காயங்கள் இல்லை. டால்பின்களின் எதிரியான சுறாக்களுடன் சண்டையிடும் போது மயக்கமடைந்து கரை ஒதுங்கியிருக்கலாம், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments