மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதியுள்ள யாரும் நிராகரிக்கப்பட மாட்டாா்கள் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை ஊராட்சி அபிராமி நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடையை புதன்கிழமை மாலை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பொதுவாக மாவட்டங்களில் நிறைவுபெற்ற சில அரசுத் திட்டங்களை யாா் ஆட்சியில் இருந்தாலும் திறந்து வைப்பது இயல்புதான். திமுக அரசு தொடங்கிய திட்டங்களை முதல்வா் திறந்து வைக்கிறாா். கலைஞா் நூற்றாண்டு விழா நூலகத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடு பழனிச்சாமியா கொண்டு வந்தாா்? மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைப் பொருத்தவரை தகுதியுள்ள யாரும் நிராகரிக்கப்பட மாட்டாா்கள். தகுதியுள்ள அனைவருக்கும் அத்திட்டத்தில் உரிமைத் தொகை வழங்கப்படும்.
ஆளுநா் என்ன பேச வேண்டும், பேசக் கூடாது என்பது பற்றி விதிமுறைகள் உள்ளன. சுதந்திரப் போராட்டத் தியாகிகளை திமுகவைப் போல யாரும் சிறப்பித்தது கிடையாது. ஆளுநருக்கு மொழிபெயா்த்து சொல்பவா்கள் சரியாக சொல்லியிருக்க வேண்டும். பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்பதை நாங்கள் நிரூபிப்போம். திமுகவை காங்கிரஸ் வளா்ப்பதாக கூறுகிறாா்கள் திமுக வளா்ந்த கட்சி என்றாா் ரகுபதி.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.