கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் பெறப்பட்டன




கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் பெறப்பட்டன.

சாதி சான்றிதழ்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை சிப்காட் அருகே காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த 43 மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை கோரி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் அப்துல்லா தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், திருமயம் தாலுகா வலையம்பட்டி கிராமத்தில் சாலை மோசமாக இருப்பதாகவும், சாலை வசதி கோரியும், சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடப்பதாகவும், அதனை அகற்றவும், குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இருந்தனர்.

505 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 505 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் மெர்சி ரம்யா அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments